"நல்ல சோறு" சிறு தானிய உணவுகள் நூல் வெளியீட்டு விழா




            நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களை கைவிட்டு அரிசி சோற்றின் மீது நம் சமூகம் தன கவனத்தை திருப்பியது, இந்தியாவில் 57 லட்சம் குழந்தைகள் போஷாக்கின்மை காரணமாக, சராசரி எடையை விட குறைவான எடையுடன் பிறப்பதாகவும், நம் நாட்டில் மொத்த உணவு உற்பத்தியைப் பற்றி அதிகமாகப் பேசப்படும் வேளையில், கடந்த 1991-ம் ஆண்டு தாராளமாயப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின்னால், இந்தியாவில் தனி நபருக்குக் கிடைத்து வந்த உணவு,அதற்கு முன் இருந்ததை விட 2001-ம் ஆண்டில் 150 கிலோவாகக் குறைந்துவிட்டது என்றும் இப்படி உணவு உற்பத்தி அளவும் பெருமளவு குறைந்துவிட்டதற்கு, விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை வேறு பயன்பாடுகளுக்குக் கொடுத்துவிட்டு வெளியேறி வருவது ஒரு காரணம்.

1965க்கு முன் அன்றாட வாழ்வில் கம்மங்கூழும், கேப்பைக் கழியும் நீக்கமற நிறைந்திருந்தன, காலையில் வடிகஞ்சி, பின்னர் வயல் வேலை அப்புறம் கம்மங்கூழ் என்று ஓடியது தினசரி வாழ்வு.

பின்னர் தட்டில் அரிசி என்பது ஒரு கௌரவம் என்ற கருத்துருவாக்கம் நிகழ்ந்தது. இப்படியாக ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சிறுதானிய உணவிற்கு தமிழன் கொஞ்சம் கொஞ்சமாக மறுப்பு சொன்னான் .
இது வாய்வு, மலச்சிக்கல், இரத்த அழுத்தம் சர்க்கரை என, பல வியாதிகளை உருவாக்கியது.

நாம் சிறு தானியங்களை நோக்கி நம் கவனத்தை திருப்பினால் அதற்கான சந்தை ஒன்று தானே உருவாகும். சிறுதானியங்கள் தண்ணீர் அதிகம் கேட்டகாத மானாவாரி பயிர்கள் என்பது ஒரு கூடுதல் பலம். நமது பாரம்பரிய சிறு தானியங்களின் ஒரு கிலோ உற்பத்திக்கு சொற்ப தண்ணீர் போதுமானது.

அன்னம் எப்படியோ எண்ணம் அப்படியே,உணவின் தூய்மை உணர்ந்து வாழ்வை எளிமையாக்கும் உன்னத பாதை சிறு தானிய உணவு முறைகளில் பொதிந்துள்ளது

- கோ.நம்மாழ்வார்
"நல்ல சோறு " ரா.ராஜமுருகன் எழுதிய சிறு தானிய உணவுகள் நூல் வெளியீட்டு விழா
நவம்பர் 23, கயித்த மலை குக்கூ நூலகம்
தொடர்புக்கு - 9842672439,9942118080.

                                         -பசுமை நாயகன்